தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உள்ளாட்சித்தேர்தலில், மதுரை மாநகராட்சிக்கு ம.தி.மு.க., சார்பில் மேயர் வேட்பாளராக பாஸ்கர சேதுபதி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று மதுரையின் பல்வேறு பகுதிகளில் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி அதிகளவிலான வாகனங்கள் வந்ததாக, வைகோ மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment