உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Tuesday, September 27, 2011

தமிழக மாவட்டங்கள்


அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம்

சென்னை: உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதில் மாநில தேர்தல் கமிஷனர் சோ. அய்யர் கலந்து கொண்டார். இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தே.மு.தி.க.- மா.கம்யூ.,இணைந்து 3வது அணி

அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறிய மார்க்சிஸ்ட் கட்சி, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கிடையே சுமுகமாக முடிந்துள்ளதை அடுத்து தொகுதியும் பிரிக்கப்பட்டது. 3 வது அணியாக உருவெடுத்துள்ளது ஒரு நல்ல செய்தி என்றார் விஜயகாந்த். அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சு வார்த்தையை மார்க்சிஸ்ட் கட்சி துவக்கியது.சென்னை கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன், தொகுதிகள் பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பாலகிருஷ்ணன், தங்கவேலு, நூர் முகம்மது ஆகியோரும் பங்கேற்றனர்.மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட வேண்டாம் என்றும், தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிடாது எனவும் பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் கூட்டணிக்கு அழைத்து வர வேண்டும்' என விஜயகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்தை மார்க்சிஸ்ட் கட்சியும் ஏற்றுக்கொண்டது. அதை தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தே.மு.தி.க.,வுடன் தொகுதி பங்கீடு செய்யும் வாய்ப்புள்ளது. தொகுதிகள் பங்கீட்டில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கட்சிகள் மத்தியில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க., தலைமையில் புது அணி உருவாகியுள்ளது. இதற்கிடையில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம், மயிலாப்பூர் மாங்கொல்லையில் இன்று நடக்கிறது. அக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தனது பிரசாரத்தை துவக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். கோவை - வேலூரில் மார்க்., கம்யூ., போட்டி: அ.தி.மு.க., தன் கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட்டதையடுத்து, தே.மு.தி.க.,வும், மார்க்சிஸ்ட் கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேச்சு நடத்தின. இதில், இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மார்க்., கம்யூ., செயலர் ராமகிருஷ்ணனும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் மார்க்., கம்யூ., போட்டியிடும் தொகுதிகளை ராமகிருஷ்ணன் அறிவித்தார். இதன்படி கோவை, வேலூர் மாநகராட்சிகள் மார்க்., கம்யூ., போட்டியிடுகிறது. மாவட்ட அளவில் உள்ள வார்டுகளுக்கு இரு கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் ‌கலந்து பேசி முடிவு எடுத்துக்கொள்வர் என்றார். சுமுக உறவு இது என்கிறார் விஜயகாந்த்: விஜயகாந்தும், ஜி.ராமகிருஷ்ணனும் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேசுகையில்: விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: 3 வது அணி அமைந்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி இதை மட்டும் மக்களுக்கு பத்திரிகையாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் வேறு எதையும் பற்றி நிருபர்கள் கேட்க வேண்டாம். மற்றதை அப்புறம் வைத்துக்கொள்வோம் . இப்போதைக்கு சுமுகமான உறவு ஏற்பட்டிருக்கிறது என்றார்.

Monday, September 26, 2011

பதவியை ஏலம்விட்டால் கடும் தண்டனை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பதவியிடங்களை ஏலம்விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில், எதிர்வரும் 17-10-2011 மற்றும் 19-10-2011 ஆகிய இரு நாட்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற மாநிலத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் பணிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் பதவியிடங்கள் ஏல முறையில் கைப்பற்ற முயற்சிகள் செய்வதாகவும், இந்த செயல்களில் ஒரு சில ஊர் பிரமுகர்கள் கூட்டாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பெறப்படுகின்றன.

இந்த செயல்கள் கடுமையாக கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டியதாகும். மேலும், இது கிரிமினல் குற்றமாகவும் கருதப்பட்டு கடும் தண்டனை வழங்கவும் வழிவகுக்கும்.

எனவே, இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அல்லது மாவட்ட கலெக்டர்கள் கவனமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று வரப்பெறும் தகவல்கள் மீது உடனடியாக விசாரித்து, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 29-9-2011 அன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், அனைத்து பதவிகளுக்கும் 24-9-2011 (சனிக்கிழமை) வரை மொத்தம் 25,723 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், வேட்புமனு தாக்கல் செய்ய 29-9-2011 தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில நாட்களிலேயே வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதை அதிகம் பேர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

எனவே, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்புமனுக்களை பெறும் தேர்தல் அலுவலர்கள், அதிகமாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கக்கூடிய நாட்களில் கூடுதல் பணியாளர்களை இதற்கென அமர்த்தி சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வருகின்ற வேட்பாளர்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் விதிகளுக்குட்பட்டு தாமதமின்றி வேட்புமனுக்களை பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அறிவுறுத்தியுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 21, 2011

தேர்தல் கமிஷனர் அறிவிப்பு:தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி

அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தமிழக உள்ளாட்சி தேர்தல்
சென்னை: தமிழக உள்ளாட்சித்தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர் சோ. அய்யர் தெரிவித்தார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (செப்.22) துவங்குவதாக தெரிவித்தார். மேலும் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி வரும் 29ம் தேதி என்றும், வேட்பு மனுக்கள் பரிசீலனை 30ம் தேதி நடக்கும் என்றும், அக்டோபர் 3ம்தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதி என்றும் தெரிவித்தார். வரும் அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தல் அனைத்து மாநகராட்சிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் மற்ற பகுதிகளுக்கும் நடக்கவுள்ளது. ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அக்டோபர் 25ம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவியேற்பர். தமிழக உள்ளாட்சித்தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, இந்த தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் மூலம் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசு அலுவலர்கள் மூலம் வீடுவீடாக வழங்கப்படவுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதையடுத்து, உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.

Monday, September 5, 2011

உள்ளாட்சி தேர்தல் 2011


உள்ளாட்சி தேர்தல் 2011:

ullatchi therthal 2011 :

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...