உள்ளாட்சி உயர்வு பெற தவறாமல் வாக்களிப்பீர் !! உள்ளாட்சி உயர்வுக்கு உங்கள் வாக்கு அவசியம் !! விலை மதிப்பற்ற உங்கள் வாக்கை விற்காதீர் !! சரியாக சிந்தித்து வாக்களியுங்கள் !! வாக்குரிமை நமது உரிமை வாக்குப்பதிவு நாளன்று தவறாது வாக்களிப்போம் !! வாக்களிப்பது நமது கடமை, அதனை தவறாது செய்வீர் !

Election Commission 24x7 helpline number - 1950

Sunday, October 2, 2011

தேர்தல் அலுவலர்களுக்கு கமிஷன் புதிய உத்தரவு

உத்தமபாளையம் : நகராட்சி, பேரூராட்சிகளில் முதன் முறையாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் அலுவலர்களுக்கு, கமிஷன் புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. தலைவர், கவுன்சிலருக்கு என இரண்டு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், அவற்றை இரண்டு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் வாக்காளர்களை அனுமதிக்க வேண்டும். ஒரு ஓட்டுக்கு மேல் பட்டனை அழுத்திவிடாமல் இருக்க கவனமுடன் கண்காணிக்க வேண்டும். இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முன்னோட்ட ஓட்டுப்பதிவை செய்து காட்ட வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முதல் நாளே, ஓட்டுச்சாவடியில் வந்து தங்க வேண்டும்,என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

BIG ROCK

Related Posts Plugin for WordPress, Blogger...