உத்தமபாளையம் : நகராட்சி, பேரூராட்சிகளில் முதன் முறையாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் அலுவலர்களுக்கு, கமிஷன் புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. தலைவர், கவுன்சிலருக்கு என இரண்டு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், அவற்றை இரண்டு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் வாக்காளர்களை அனுமதிக்க வேண்டும். ஒரு ஓட்டுக்கு மேல் பட்டனை அழுத்திவிடாமல் இருக்க கவனமுடன் கண்காணிக்க வேண்டும். இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முன்னோட்ட ஓட்டுப்பதிவை செய்து காட்ட வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முதல் நாளே, ஓட்டுச்சாவடியில் வந்து தங்க வேண்டும்,என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment