29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்; நாளை முதல்வராக ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்பு தந்து பாருங்கள்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்; நாளை முதல்வராக ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்பு தந்து பாருங்கள்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்னை, தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. மத்திய அரசு சார்பில் சிலர், இலங்கைக்கு செல்வதாக போக்கு காட்டுகின்றனர். எங்கு செல்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் யாராவது ஊழல் செய்தால், மருத்துவமனையில் படுத்து கொள்கின்றனர். மத்திய அரசில் ஊழல் செய்தால், ஞாபக மறதி என கூறுகின்றனர். நாட்டை யார் காப்பாற்றுவது என தெரியவில்லை.
மக்கள் தங்கள் ஜீவாதாரத்தை தீர்த்து கொள்ள, தாங்களே நிர்வாகம் செய்வது தான் உள்ளாட்சி. இதில் அரசியலை பார்க்காதீர். காந்தி உடலை வருத்தி சுதந்திரம் வாங்கினார். ஆனால், தற்போது லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளதால், மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பெற்றோர் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப்படுகின்றனர்.
சென்னையை சிங்கார சென்னையாக்குவேன் என மாறி மாறி கூறினர். ஆனால், இதுவரை யாரும் முயற்சி எடுக்கவில்லை. எனக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். நிரந்தரமாக இல்லை; ஐந்தாண்டுகளுக்கு மட்டும் கொடுத்து பாருங்கள். என் கட்சி நிர்வாகிகள் நல்லது மட்டுமே செய்வார்கள்.
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், நான் சும்மா விடமாட்டேன். கடந்த ஏழு ஆண்டுகள் போராடி தற்போது நம்பர் 1 கட்சியாக சட்டசபையில், 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். நாளை முதல்வராக நீங்களே முடிவு செய்து, வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
"24 மணி நேர சீரான மின்சாரம்' : "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... நன்றி மறவாத உள்ளம் உங்களிடமும் என்னிடமும் உள்ளது. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' நான் என் பாக்கெட்டில் இருக்கும் வரை மாவட்டம்தோறும் மக்களுக்கு கொடுத்து வருகிறேன். இதே ஆட்சி, என்னிடம் இருந்தால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும். நான் ஆட்சியில் இருந்தால், 24 மணி நேரமும் சீரான மின்சாரம், 24 மணி நேரமும் பணியில் டாக்டர்கள், சுகாதாரமான குடிநீர், சுத்தம், வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் கிடைக்கும். இவை வாக்குறுதிகள் மட்டும் அல்ல. வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; செய்து காண்பிக்கிறேன் என, விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்னை, தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. மத்திய அரசு சார்பில் சிலர், இலங்கைக்கு செல்வதாக போக்கு காட்டுகின்றனர். எங்கு செல்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் யாராவது ஊழல் செய்தால், மருத்துவமனையில் படுத்து கொள்கின்றனர். மத்திய அரசில் ஊழல் செய்தால், ஞாபக மறதி என கூறுகின்றனர். நாட்டை யார் காப்பாற்றுவது என தெரியவில்லை.
மக்கள் தங்கள் ஜீவாதாரத்தை தீர்த்து கொள்ள, தாங்களே நிர்வாகம் செய்வது தான் உள்ளாட்சி. இதில் அரசியலை பார்க்காதீர். காந்தி உடலை வருத்தி சுதந்திரம் வாங்கினார். ஆனால், தற்போது லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளதால், மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பெற்றோர் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப்படுகின்றனர்.
சென்னையை சிங்கார சென்னையாக்குவேன் என மாறி மாறி கூறினர். ஆனால், இதுவரை யாரும் முயற்சி எடுக்கவில்லை. எனக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். நிரந்தரமாக இல்லை; ஐந்தாண்டுகளுக்கு மட்டும் கொடுத்து பாருங்கள். என் கட்சி நிர்வாகிகள் நல்லது மட்டுமே செய்வார்கள்.
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், நான் சும்மா விடமாட்டேன். கடந்த ஏழு ஆண்டுகள் போராடி தற்போது நம்பர் 1 கட்சியாக சட்டசபையில், 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். நாளை முதல்வராக நீங்களே முடிவு செய்து, வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
"24 மணி நேர சீரான மின்சாரம்' : "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... நன்றி மறவாத உள்ளம் உங்களிடமும் என்னிடமும் உள்ளது. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' நான் என் பாக்கெட்டில் இருக்கும் வரை மாவட்டம்தோறும் மக்களுக்கு கொடுத்து வருகிறேன். இதே ஆட்சி, என்னிடம் இருந்தால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும். நான் ஆட்சியில் இருந்தால், 24 மணி நேரமும் சீரான மின்சாரம், 24 மணி நேரமும் பணியில் டாக்டர்கள், சுகாதாரமான குடிநீர், சுத்தம், வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் கிடைக்கும். இவை வாக்குறுதிகள் மட்டும் அல்ல. வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; செய்து காண்பிக்கிறேன் என, விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
No comments:
Post a Comment